தமிழகம்

ஆயுள் கைதிக்கு சிறையில் சித்ரவதை.. வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிரடி ரெய்டு..!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவகுமார் என்பவர் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக இருந்தார். இவரது தாய் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதில் ஆயுள் கைதியான தனது மகனை சட்டவிரோதமாக வேலூர் சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு பணி அமைத்ததாகும். அங்கு நகை பணம் காணாமல் போன நிலையில் தனது மகன் எடுத்ததாக கூறி தனியாக சிறையில் வைத்து சித்திரவதை செய்ததாக புகார் அளித்திருந்தார்

இதனை அடுத்து இந்த புகார் குறித்து வேலூர் சிறைத்துறை நீதித்துறை நடுவர் உத்தரவிட்டிருந்தது நீதித்துறை நடுவர் அளித்த அறிக்கை அடிப்படையில் சிபிசிஐடி எஸ் பி வினோத் சாந்தாரா தலைமையிலான போலீசார் சிறை அதிகாரிகள் அத்துமீறல் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக பாதுகாப்பு அடிப்படையில் சிவகுமார் சேலம் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர் தனக்கு நேர்ந்த கொடுமையை சிவக்குமார் விரிவான வாக்குமூலம் அளித்ததின் அடிப்படையில்
வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் கூடுதல் எஸ் பி அப்துல் ரகுமான், ஜெய்லர் அருள்குமரன் உட்பட 14 பேர் மீது ஐந்து பிரிவினில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஐந்து மாதத்திற்கு மேலாக சிவகுமாருக்கு இந்த கொடுமை நடந்துள்ளது என்பது முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில் ஆயுள் கைதி சிவகுமார் பணி அமைக்கப்பட்ட நிலையில் ஐந்து லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகை திருடு போனதாகவும் அதனை சிவகுமார் திருடி இருக்கலாம் என்று சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி கூறியதன் அடிப்படையில் சிறைத்துறை கூடுதல் எஸ் பி ஜெயிலர் மற்றும் சிறை துறையினர் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

வேலூர் மத்திய சிறையிலும் டிஐஜி பங்களாவிலும் ஆய்வு செய்ததன் அடிப்படையில் திருட்டு சம்பவம் நடந்தது தொடர்பாகவும் அது சம்பந்தமாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தது .

ஆயுள் கைதி சிவகுமார் 84 நாட்கள் தனிமை சிறையில் அடைக்கப்பட்டதும் 14 நாட்கள் மூடப்பட்ட இருட்டு அறையில் மிகக் கொடுமையாக தாக்கப்பட்டதும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி போலீசார் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

AddThis Website Tools
Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

5 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

6 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

6 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

7 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

7 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

8 hours ago