Categories: தமிழகம்

வேலூர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு: 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை …மகிளா நீதிமன்றம் தீர்ப்பு..!!

வேலூர்: 2020ம் ஆண்டு வேலூர் கோட்டை பூங்காவில் வைத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகள் என்று மகிளா நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பு வழங்கினார்.

வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் கடந்த 2020ம் ஆண்டு வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார்.

இளம்பெண்ணும், அதே கடையில் பணிபுரிந்த காட்பாடியை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்தனர். காதல்ஜோடியினர் ஜனவரி மாதம் 18ம் தேதி ஜவுளிக்கடையில் வேலை முடிந்த பின்னர் இரவில் கோட்டை பூங்காவிற்கு சென்று அகழி கரையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

இரவுநேரத்தில் காதல்ஜோடியினர் தனியாக இருப்பதை அறிந்த 2 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணிடம் அத்துமீறினர். அதனை தடுத்த காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள், இருவரிடமும் இருந்த செல்போன், பணம் மற்றும் இளம்பெண் அணிந்த கம்மலை பறித்தனர்.

தொடர்ந்து 2-பேரும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினார்கள். 2பேரும் குற்றவாளிகள் இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் பூங்காவை ஒட்டியுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், வேலூர் கஸ்பாவை சேர்ந்த அட மணி(எ) மணிகண்டன் (வயது 41), வசந்தபுரத்தை சேர்ந்த சக்திவேல் (எ) கோழியும்(21), இளம்பெண் அணிந்த கம்மல் மற்றும் செல்போன்களை வாங்கி விற்ற தொரப்படியை சேர்ந்த கொய்யா(எ) மாரிமுத்து (31) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதிவிசாரணை நேற்று நடைபெற்றது.

இதையொட்டி மணிகண்டன், சக்தி, மாரிமுத்து ஆகிய 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்ளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் A1, அட மணி(எ)மணிகன்டனுக்கும்,A2 சக்திவேல்(எ)கோழி க்கும் 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து 26 ஆயிரம் அபராதமும், பொருளை வாங்கி விற்ற கொய்யா(எ) A3 மாரிமுத்துவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பு வழங்கினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

1 day ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

1 day ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

1 day ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

1 day ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

1 day ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

1 day ago

This website uses cookies.