தொடர் விடுமுறை..மலைக்க வைத்த மது விற்பனை வசூல்.. TASMAC நிர்வாகம் வெளியிட்ட ரிப்போர்ட்..!!!
நாடாளுமன்ற தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் 17-ந்தேதி (நேற்று) முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் மூடப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.
அதேபோல வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4-ந்தேதியும் மதுக்கடைகள் அடைக்கப்பட இருக்கிறது. எப்போதுமே மதுக்கடைகள் ஒருநாள் மூடினாலே, அதனை மதுபிரியர்கள் தாங்கமாட்டார்கள். அந்தவகையில் தொடர்ந்து 3 நாட்கள் மூடினால் சும்மா விடுவார்களா.
இதையடுத்து கடந்த 16-ந்தேதியே மதுக்கடைகள் முன்பு மதுபிரியர்கள் திரண்டனர். வரிசை கட்டி நின்று தேவையான மதுபாட்டில்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர்.
கையில் தூக்கி செல்லமுடியாத அளவு மதுபாட்டில்களை பையில் வாங்கி சென்ற மதுபிரியர்களையும் பார்க்க முடிந்தது. இதனால் மதுக்கடைகள் அன்றைய தினம் திருவிழாக்கோலம் கண்டது. கடைகள் திறந்தது முதல் மூடப்படும் வரை மதுக்கடைகள் பரபரப்பாகவே செயல்பட்டன.
பல இடங்களில் அடைக்கப்பட்ட கடைகள் முன்பும் மதுபிரியர்கள் ஏக்கத்துடன் சுற்றி திரிந்ததை பார்க்க முடிந்தது. அந்தவகையில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மது விற்பனை பண்டிகை காலங்களை போன்ற விற்பனையை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே, தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி மட்டுமே ரூ.289.29 கோடிக்கு மது விற்பனை நடந்திருக்கிறது.இதுகுறித்து பேசிய டாஸ்மாக் அதிகாரிகள், டாஸ்மாக் விற்பனை ஏப்ரல் 16-ந்தேதி அதிகம். அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.68.35 கோடி விற்பனை ஆனது.
திருச்சி மண்டலத்தில் ரூ.58.65 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.57.30 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.55.87 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.49.10 கோடி என ஒரே நாளில் ரூ.289.29 கோடிக்கு விற்பனை ஆனது. தமிழகத்தில் வழக்கமான நாட்களை காட்டிலும், ஏப்ரல் 16-ந்தேதி நடைபெற்ற விற்பனை 2 மடங்கு அதிகமாகும்” என்று கூறினர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.