நாகை அருகே ஐஸ் பெட்டிக்குள் வைத்து குச்சி ஐஸ் விற்பது போல், நடமாடும் சரக்கு வியாபாரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வரப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில், வெளி மாநில மதுப்பாட்டில்கள் கடத்தல் மற்றும் சாராய விற்பனையை தடுக்க பல்வேறு இடங்களில் சார்பில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதனால் மது பாட்டில் கடத்துபவர்களும், விற்பனை செய்பவர்களும் பல்வேறு நூதன யுக்திகளை கையாண்டு மது பாட்டில்கள் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நாகை மாவட்டம் திட்டச்சேரி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட TR பட்டினம் சாலையில் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதுயைச் சேர்ந்த ஃபாதர் வெள்ளை என்பவர் இருசக்கர வாகனத்தில் ஐஸ் வியாபாரம் செய்வது போல், ஐஸ் பெட்டிக்குள் வைத்து, புதுச்சேரி மாநில 90 ml அளவுகொண்ட மதுப்பாட்டில்களை கடத்தி வந்து நூதன முறையில் விற்பனை செய்துள்ளார்.
அந்த பகுதியில் போலீசாரின் வாகன சோதனையின் போது நடமாடும் சரக்கு வியாபாரத்தில் ஈடுபட்ட சரக்கு வியாபாரி பாதர் வெள்ளை என்பவரை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த ஐஸ் பெட்டிக்குள் இருந்து சுமார் 400 பாண்டிச்சேரி மது பாட்டில்களையும், இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கால்நடைகளுக்கு இலை தளைகள் கொண்டு போவது போல், வேப்பிலை கிளைகளுக்குள் மது பாட்டில்களை வைத்து கடத்தி சென்றவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.