Categories: தமிழகம்

கூலித் தொழிலாளர்களை குறி வைத்து அமோக மது விற்பனை.. முன் வாசலை மூடி பின் வாசலில் ஜோர் : மதுப்பிரியர்கள் அவதி… !!

வேலூர் : அதிக விலைக்கு விற்கும் போலி டாஸ்மாக் கடையால் மதுப்பிரியர்கள் அவதியடைந்து வரும் நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை கூட்டு சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. இங்கு குடிமகன்கள் கூட்டம் எப்போதும் அலைமோதியபடி காணப்படும்.

அப்படிபட்ட இடத்தில் கடை நேரம் முடித்தவுடன் மறுநாள் காலை திறக்கும் வரை (இரவு 10 மணி முதல் மறுநாள் 12 மணிவரை) டாஸ்மாக் கடைக்கு நிகராக இரவு முதல் காலை வரை தடையில்லாமல் இயங்கும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அமோகமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கு அதிக விலை மதுபானம் முதல் குறைந்த விலை மதுபானம் குளிர்ந்த பீர் வகைகள் என தங்கு தடையின்றி கிடைக்கின்றது,

இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் கூறும்போது இங்கு நாள்தோறும் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர்.

இதில் தினக்கூலித் தொழிலாளர்களையும், கட்டிட தொழிலாளர்கள் உழைத்து உடல் வலியால் குடிக்கும் இவர்களை குறி வைத்துதான் இந்த கடை துவங்கியுள்ளது என்றும் ஏனென்றால் குறைந்த விலை மது பாட்டில்களை மட்டுமே வாங்கும் இவர்கள் அதிக விலையுள்ள வேறு பிராண்டு சரக்கை வாங்கி அருந்த மாட்டார்கள்.

ஆகவே இதில் விலை ஏற்றி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அந்த வகை மதுபாட்டில் மட்டும் மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

பல்வேறு குற்ற செயல்களை போதை பொருள் தான் முக்கிய காரணியாக இருக்கின்றது அது போன்ற சம்பவம் நடை பெறுவதற்குள் முற்று புள்ளி வைக்க வேண்டும்.

திரைப்படப் பாடலில் வருவது போல ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன் என்ற பாடலுக்கு ஏற்றவாறு டாஸ்மாக் கடை மூடினாலும் கூட அதற்கு அருகிலேயே டாஸ்மாக் மதுபானங்களை அதிக விலைக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கை கட்டி கண்மூடி வேடிக்கை பார்ப்பது தான் மிகவும் வருத்தம். எனவே வேலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

7 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

8 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

9 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

9 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

10 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

10 hours ago

This website uses cookies.