கரூர் : கரூரில் மதுபான கடை விடுமுறை நாளன்று மது போதையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் மிலாடி நபியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகளுடன் அமைந்துள்ள சில மதுபானக்கூடங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. அங்கு மது மதுபானங்களை வாங்கி அருந்திய சிலர் போதையில் தள்ளாடி சென்றுள்ளனர்.
எல்.ஐ.சி அலுவலக வாசல் முன்பு சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகளப்பாக மாறி உள்ளது. இதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரை, மற்றொரு இளைஞர் சரமாரியாக தாக்கியதில் அவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்த அடையாளம் தெரியாத இளைஞரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரை தாக்கி விட்டு தப்பி சென்ற நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.