வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் சத்தத்துடன் கூடிய லேசான நில அதிர்வு உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள தரைக்காடு பகுதியில் நேற்று மதியம் அதிக சத்தத்துடன் கூடிய லேசான நில அதிர்வு உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லேசான நில அதிர்வால் எந்தவித பாதிப்புகளும், பொருட் சேதங்களும் ஏற்படவில்லை என வருவாய் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், ஒரு சில வீடுகள் லேசான விரிசல் விடப்பட்டதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு இதே பகுதியில் தொடர்ந்து சில நாட்கள் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர் மழைக்காலங்களில் இந்த பகுதியில் நில அதிர்வு ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.