மஞ்சுவிரட்டில் பறிபோன உயிர்கள்.. காளை முட்டி 13 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்த பரிதாபம்!!
தமிழர் திருநாளாம் தை பொங்கள் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இன்று உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் சிறாவயல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போன்ற மஞ்சுவிரட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் 271 காளைகள் பங்கேற்றன. 81 மாடுபிடி வீரர்கள் இந்த விளையாட்டில் பங்கேற்றனர். சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போட்டியின் போது, அங்கு பார்வையாளராக வந்திருந்த வலையப்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுவன் பாஸ்கரை மஞ்சுவிரட்டு காளை ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான்.
அதே போல மஞ்சுவிரட்டு காளை அவிழ்த்துவிடப்பட்டு அது குறிப்பிட்ட தூரத்தை கடந்து, மாட்டின் உரிமையாளர்கள் அதனை பிடிக்க முற்படும் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதே போல அடையாளர் தெரியாத இளைஞர் ஒருவர் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் உயிரிழந்ததால் ஜல்லிக்கட்டு போட்டியில் பரபரப்பு நிலவியது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.