தமிழகம்

அரசுப் பள்ளி மதிய உணவில் பல்லி.. வாந்தி, மயக்கத்தால் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

தருமபுரி, அரூர் அரசுப் பள்ளியில் இன்று வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்த நிலையில், மாணவிகள் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த நிலையில், இந்தப் பள்ளியில் வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டு உள்ளது. அப்போது, இதனை முதலில் சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது.

எனவே, அவர்கள் உடனடியாக அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதில் ஒரு மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இது தொடர்பாக விசாரணை செய்ததில், பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி கிடந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து அறிந்த வருவாய் கோட்டாட்சியர் சின்னுசுவாமி, வருவாய் ஆய்வாளர் சக்தி பிரியா மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவிகளைச் சந்தித்து, நலம் விசாரித்து ஆறுதல் கூறிய அவர்கள், மருத்துவர்களிடம் மாணவிகளின் உடல்நலம் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், பள்ளிக்குச் சென்ற வருவாய் கோட்டாட்சியர், அங்கு பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனை வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை.. சிவகங்கையில் பதற்றம்!

அது மட்டுமல்லாமல், இன்று வழங்கப்பட்ட மதிய உணவின் மாதிரியை எடுத்து, ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் சின்னுசுவாமி கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

4 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

5 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

5 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

5 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

5 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

5 hours ago

This website uses cookies.