சிவகங்கை: மானாமதுரையில் லோடுமேன் வேலை பார்க்கும் ஒருவர் அதிமுக சார்பில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ளார்.
மானாமதுரை 14-வது வார்டு அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள பழனி என்பவர், இரவில் லோடுமேன் பணியையும் பகலில் தேர்தல் பணிகளையும் கவனித்து வருகிறார்.
இதன் மூலம் கட்சியில் கீழ்நிலை தொண்டனும் அடுத்தடுத்து உயரத்தை எட்ட முடியும் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் தீயாய் வேலை செய்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிர ஈடுபட்டு வருகின்றனர்.
எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் புதுமுகங்களும், பாட்டாளி வர்க்கத்தினரும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் லோடுமேன் ஒருவர் அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மானாமதுரை 14வது வார்டில் போட்டியிடும் பழனி என்பவர், இரவில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும் பகலில் ஒயிட் அண்ட் ஒயிட் கெட்டப்பில் மாஸ் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார்.
ஓட்டுக் கேட்பதற்காக மக்களை சந்திக்கச் செல்லும் இவர், தாம் ஒரு லோடுமேன் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து உங்களுக்காக உழைக்க காத்திருப்பதாக உறுதியும் கொடுக்கிறார். பாரம் தூக்கும் தொழிலாளிக்கு கவுன்சிலர் சீட் கொடுக்கப்பட்டதன் மூலம் கட்சியில் யார் வேண்டுமானாலும் எந்த நிலைக்கும் உயரலாம் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வருவதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். காலை 7 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் களப்பிரச்சாரத்திலும், இடைப்பட்ட நேரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.