Categories: தமிழகம்

திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும் : வைரலாகும் ட்வீட்… உற்சாகத்தில் தமிழக பாஜக!!!

திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும் : வைரலாகும் ட்வீட்… உற்சாகத்தில் தமிழக பாஜக!!!

‘புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்’ என்று தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு இரு கட்சிகளின் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது, பாஜக மேலிடத்துக்கு அதிர்ச்சியை தந்துள்ளது என்றே கூறலாம்.

ஏனென்றல், வரும் தேர்தலில் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெறாமல் என்று பாஜக எண்ணிக்கொண்டு இருந்த நிலையில், அண்ணாமலையுடனான மோதலால் கூட்டணி முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்தது. இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர்கள் கூறுகையில், அதிமுக விலகியதால் பாஜகவுக்கு எந்த நஷ்டமும் இல்லை.

எங்கள் மேலிடம் அறிவுரை கூறிய பிறகு எங்களது கருத்துக்களை தெரிவிக்கிறோம் என்றும் அதுவரை எந்த கருத்தும் கூற மாட்டோம் எனவும் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு கூட்டணி முறிவு என்று அறிவித்த அதிமுக தற்போது பேசாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.

இதனால், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமான என சந்தேகம் எழுந்தது. அதற்கேற்ப, அதிமுக நிர்வாகிகளும் மவுனம் காத்து மழுப்பலாக பதில் அளித்து வந்தனர். பாஜக குறித்து விமர்சிக்க வேண்டாம் எனவும் அதிமுக தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. எனவே, பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்குமா? என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய கே.பி.முனுசாமி, மக்களவை தேர்தல் மட்டுமில்லை இனி எந்த தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை.

அண்ணாமலையை மாற்ற அதிமுக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. புதிய கூட்டணி அமைத்து, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கும். தமிழ்நாடு மக்களின் நலன், உரிமையை பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாடுபடும் என அதிமுக – பாஜக கூட்டணி குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்தார். இவரது பேட்டிக்கு பிறகு பாஜக கருத்து கூறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்’ என்று தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி X தளத்தில் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என குறிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மரண மாஸ்.!மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்.!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…

10 minutes ago

விஜயைச் சுற்றி 11 CRPF படையினர்.. உளவுத்துறை ரிப்போர்ட் என்ன?

தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…

20 minutes ago

அதெல்லாம் சொல்ல முடியாது.. இபிஎஸ் உடனான சந்திப்பு.. மனம் திறந்த எச்.ராஜா!

தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…

1 hour ago

நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!

"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…

1 hour ago

என்ன நடக்குது…கண்டிப்பா தட்டி கேட்கனும்‌‌..இயக்குனர் மோகன் ஜி கொந்தளிப்பு.!

மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…

2 hours ago

அமைச்சரின் குழந்தைகள் அறிவற்றவர்களா? அண்ணாமலை கடும் தாக்கு!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…

4 hours ago

This website uses cookies.