Categories: தமிழகம்

நள்ளிரவில் நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்… காதலர் தினத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அகிலாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் என்பவரது மகன் சந்துரு. அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் தர்ஷினி.

சந்துரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் கல்லூரி படிப்பை முடித்து வீட்டில் இருக்கும் தர்ஷினி ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் தர்ஷினியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தர்ஷினியை அவரது பெற்றோர் வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எப்படியாவது என்னை காப்பாற்றி அழைத்து செல்லுமாறு தர்ஷினி சந்துருவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தர்ஷினி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் தனது மகளை சந்துரு கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருவரையும் தேடி வந்த நிலையில் சந்துரு மற்றும் தர்ஷினி இருவரும் பழனியில் பதிவு திருமணத்தை முடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தால் இருவரையும் பிரித்து விடுவார்கள் என எண்ணி பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று இரவு தஞ்சம் அடைந்தனர்.

கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்ட தர்ஷனியை நீதிபதி விசாரணை மேற்கொண்டதில் எனது விருப்பப்படியே சந்துருவுடன் சென்றேன் எனவும் அவரை திருமணம் செய்து கொண்டேன் எனவும் வாக்குமூலம் அளித்தார்.

மேலும் சந்துருவுடன் செல்வதே தனது விருப்பம் என கூறினார். விசாரணையின் முடிவில் தர்ஷினி மற்றும் சந்துரு ஆகியோர் மேஜர் என்பதால் அவர்களின் பதிவு திருமணம் செல்லும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இருவரையும் பல்லடம் காவல்துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். புதுமண காதல் ஜோடிகள் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்த தகவல் கிடைத்து அங்கு அவர்களது உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

உள்ளூரிலேயே விலை போகாதவர் PK… திமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு!

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…

2 minutes ago

என் தங்கச்சி எங்க போறாங்கனு தெரியும்.. நாதகவின் அடுத்த நகர்வு? சீமான் பதில்!

நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…

35 minutes ago

வந்த வேகத்தில் ஜாக்பாட்… ஒரே சீரியலால் அத்தனை நடிகைகளையும் ஓரங்கட்டிய பிரபலம்!

சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…

1 hour ago

25 ஆண்டுகளுக்கு பின் கம் பேக் கொடுக்கும் ஷாலினி…மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா.!

குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…

1 hour ago

பாசிச பாயாசம்.. அண்ணாமலையை விமர்சித்த விஜய்.. TVK Vijay full Speech!

நிதியைக் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, வாங்க வேண்டியது இவர்களின் உரிமை என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.…

2 hours ago

வெயிட்டிங்கே வெறி ஆகுதே…அலற விடும் ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட்.!

குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி…

3 hours ago

This website uses cookies.