திருச்செந்தூர் அருகே காதலியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் அருகே உள்ள நா. முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த வன சந்தியா (20). இவர் உடன்குடி அருகில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகிறார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் (21). என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் வன சந்தியாவின் தந்தைக்குத் தெரிந்தது.
இதனால் வனசந்தியா கார்த்திக்கிடம் பேசி, பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் வனசந்தியா வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு வனசந்தியா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். தன்னிடம் பேசும் படி கார்த்திக் வற்புறுத்தியுள்ளார். அதற்கு வனசந்தியா மறுப்பு தெரிவித்ததை அடுத்து, கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வனசந்தியா கழுத்தை அறுத்துள்ளார்.
பின்னர், வீட்டிற்கு சென்று நான் சாகப் போகிறேன் என குடும்பத்தாரிடம் தெரிவித்துவிட்டு வீட்டில் உள்ள அறையை பூட்டிக்கொண்டு பேனில் சேலையினால் தூக்கு போட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த வனசந்தியாவை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.