Categories: தமிழகம்

நண்பனின் மனைவிக்கு காதல் வலை…வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி : புகார் கொடுத்த கணவர்..காவல் நிலையத்தில் நடந்த இறுதிச்சடங்கு!!

தருமபுரி : தகாத உறவு வைத்துக்கொண்ட ஜோடி விஷம் அருந்திவிட்டு மகளிர் காவல்நிலையம் முன்பு மயங்கி விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்த சதீஸ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கீதா (வயது 19) என்பவருக்கும் திருமணமாகி 11 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில் சதீஸ் அவரது மனைவி சங்கீதா இருவரும் திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். அதே போல் பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சின்னப்பபையன் (வயது 20) என்பவரும், திருப்பூரில் கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் சின்னபையனும், சதீஸ்சும் பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால், சதீஸ் சின்னபையனிடம் நட்புடன் பழகி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதில் சின்னபையனுக்கும் சதீஸ் மனைவி சங்கீதாவிற்கும் தவறான உறவு ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதனை அறிந்த சதீஸ் தகாத உறவை கைவிடுமாறு மனைவியிடம் கூறி உள்ளார்.

இதனை கேட்காதால் சொந்த ஊருக்கு சங்கீதாவை அழைத்து வந்துள்ளார். சொந்த ஊர் வந்த சங்கீதா 11 மாத கைக்குழந்தையை விட்டுவிட்டு சின்னபையனுடன் கடந்த மாதம் 3 தேதி ஊரைவிட்டு இருவரும் தலைமறைவானார்கள்.

இது குறித்து சதீஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் சின்னபையன் மற்றும் சங்கீதா இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இன்று காவல்நிலையத்திற்கு வருமாறு கூறி உள்ளனர்.

இதனையடுத்து இன்று சின்னபையன் மற்றும் சங்கீதாவும் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றனர். அப்போது இருவரும் காவல்நிலையம் நுழைவு வாயிலில் திடிரென மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த பெண் காவலர்கள் உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னபையனும், சங்கீதாவும் உயிரிழந்தனர். இது குறித்து பென்னாகரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

கள்ளக்காதல் ஜோடி விஷம் அருந்திவிட்டு காவல்நிலையம் முன்பு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

6 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

7 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

8 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

8 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

9 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

9 hours ago

This website uses cookies.