Categories: தமிழகம்

17 வயது சிறுமியுடன் காதல்.. எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தந்தை படுகொலை : திமுக பிரமுகர் மகன் உட்பட 3 பேர் கைது!!

திண்டுக்கல் : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த திமுக பிரமுகரின் மகன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா நத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார் இவருக்கு புவனேஸ்வரி (வயது 40)என்ற மனைவியும் கதிர்வேல்(வயது 22)என்ற மகனும் 17வயது மகளும் உள்ளனர். மகள் பள்ளப்பட்டியில் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

குளிப்பட்டி திமுக வடக்கு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் தங்கராஜின் மகன் விமல்ராஜ் பாலசுப்ரமணியின் மகளும் அரவக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர் இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

அவரது தந்தைக்கு இந்த விஷயம் தெரிய வந்ததை அடுத்து குளிப்பட்டியில் உள்ள விமல்ராஜ் வீட்டிற்குச் சென்று இனிமேல் எனது மகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சத்தம் போட்டதாக சொல்லப்படுகிறது.

வீட்டிற்கு வந்த பாலசுப்ரமணியம் மகளின் செல்போனை பிடுங்கி அவர்களுடன் பேசக்கூடாது என்று செல்போனை பிடுங்கி உடைத்துள்ளார். காதலியிடம் பேச முடியாமல் ஆத்திரமடைந்த விமல்ராஜ்(வயது 19) தனது நண்பரான சரவணனிடம் (வயது 19) கூறியுள்ளார்.

சரவணனின் நெருங்கிய நண்பரான அஜித் (வயது 20)அவர்களுடன் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை கூறியபோது அஜித் கொலை செய்து விடலாம் என்று திட்டம் தீட்டியுள்ளார்.

சம்பவம் செய்யும் இடத்திற்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்றும் கைரேகைகளை கொலை செய்துவிட்டு அளிப்பதற்காக பெட்ரோல் பயன்படுத்தினால் கைரேகை தெரியாது என்றும் தரமான திட்டங்களை தீட்டி கொடுத்துவிட்டு தப்பித்துக் கொள்வதற்காக இரவு நேரத்தில் படத்திற்கு சென்று அஜித் தப்பித்துக்கொள்ள பார்த்தான்.

இத்திட்டத்தை கைவிடாமல் விமல்ராஜ், சரவணனும் ஒன்று சேர்ந்து நத்தம்பட்டி அருகே சுப்பிரமணியின் தோட்டத்திற்கு இரவு பத்தரை மணிக்கு சென்று நோட்டமிட ஆரம்பித்தார்.

இரவு 12 மணிக்கு பாலசுப்ரமணி வருவதை கணித்த விமல்ராஜ், சரவணனும் கையில் வைத்திருந்த மிளகாய்பொடியை எடுத்து பாலசுப்ரமணியின் முகத்தில் தூவி விட்டு மறைந்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியதில் நிலைதடுமாறி இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் குற்றவாளிகளான விமல்ராஜ், சரவணன், அஜித்தை கைது செய்தது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது தந்தை தங்கவேலு திமுக பொறுப்பில் இருப்பதால் தன்னை காப்பாற்றி விடுவார் என்று காதலியின் தந்தையை கொலை செய்த விமல்ராஜ் இது மாதிரி இன்னும் திமுக ஆட்சியில் என்னவெல்லாம் நடக்க போகிறது என்று சமூக ஆர்வலர் வேதனை தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

5 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

5 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

6 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

8 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

9 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

10 hours ago

This website uses cookies.