சங்கரன்கோவில் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அத்திபட்டியைச் சேர்ந்தவர் சின்னமுனியசாமி. இவர் கோவில்பட்டியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் கடந்த 4 மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று கவிதாவுக்கும், சின்ன முனியசாமி க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே கவிதா உடைமைகளை எடுத்துக்கொண்டு தனது தாய்வீட்டுக்கு சாத்தூருக்கு செல்வதாக கூறிப் புறப்பட்டார்.
கவிதா ஊருக்கு செல்லும் முன்பு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சின்ன முனியசாமி கவிதாவை ஹாலோபிளாக் கற்களால் சரமாரியாக கல்லால் அடித்து தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணவன் சின்ன முனியசாமி குருவிகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து,
இச்சம்பவம் குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட கவிதாவின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.