சங்கரன்கோவில் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அத்திபட்டியைச் சேர்ந்தவர் சின்னமுனியசாமி. இவர் கோவில்பட்டியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் கடந்த 4 மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று கவிதாவுக்கும், சின்ன முனியசாமி க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே கவிதா உடைமைகளை எடுத்துக்கொண்டு தனது தாய்வீட்டுக்கு சாத்தூருக்கு செல்வதாக கூறிப் புறப்பட்டார்.
கவிதா ஊருக்கு செல்லும் முன்பு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சின்ன முனியசாமி கவிதாவை ஹாலோபிளாக் கற்களால் சரமாரியாக கல்லால் அடித்து தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணவன் சின்ன முனியசாமி குருவிகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து,
இச்சம்பவம் குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட கவிதாவின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.