Categories: தமிழகம்

மனைவி மீது மண்ணென்ணை ஊற்றி தீ வைத்த காதல் கணவன் : வரதட்சணை கொடுமையால் கொடூரம்.. பெண் மரண வாக்குமூலம்!!

காதல் கணவன் தன்னை தீ வைத்து கொளுத்தியதாக, மரண வாக்குமூலம் அளித்த மனைவியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள வழுதாவூரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். 30 வயதான ஓட்டுநரான இவருக்கும் ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்த சங்கீதா (வயது 24), என்பவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
முத்துக்குமரனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால், கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்படும். கடந்த, 4ம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு சங்கீதா மண்ணெண்ணெய் எடுத்து தானே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாக முதலில் மருத்துவரிடமும் காவல்துறையினரிடமும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சங்கீதா இறப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அதில் வரதட்சணை கேட்டு கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து சண்டை போடுவார் எனவும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பேன் எனக் கூறிய போது கணவர் என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு பின்னர் தண்ணீரில் தூக்கி வீசினார்.

உடல் முழுவதும் தோள்கள் கழன்று கதறிய போது அக்கம் பக்கத்தினர் மீட்டனர். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உண்மையை சொன்னால் உன்னை கொளுத்திய மாதிரி பிள்ளைகளையும் கொளுத்தி விடுவேன் என மிரட்டினார்.

அதனால் யாரிடமும் உண்மையை சொல்லவில்லை நீதிபதி போலீசார் டாக்டர் மற்றும் எங்கள் வீட்டில் உள்ளவர்களிடமும் பொய் தான் சொன்னேன். இதுதான் நடந்த உண்மை என சங்கீதா கூறியுள்ளார்.

சங்கீதாவின் தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டமங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

11 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

11 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

12 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

13 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

14 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

17 hours ago

This website uses cookies.