திருப்பூர் : பல்லடம் அருகே 2 சொகுசு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியான நிலையில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியிலிருந்து பல்லடத்திற்கு மணவரை அலங்கார வேலை பார்க்கும் டேவிட்ராஜ், வெள்ளிமலை, சுரேஷ், ஓட்டுநர் மூர்த்தி ஆகியோர் காரில் இன்று மாலை வந்தனர்.
இந்நிலையில் உடுமலையிலிருந்து கோவை நோக்கி சொகுசு காரில் உடுமலையை சேர்ந்த மணி (வயது 55) மற்றும் அவரது மனைவி மீனாட்சி (வயது 51) மற்றும் அவரது மகள் கிருத்திகா மற்றும் கிருத்திகாவின் 2 வயது குழந்தை மகிழன் சென்றனர்.
இரண்டு கார்களும் பல்லடம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரும்பாளி பகுதியில் நேருக்குநேர் நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூர்த்தி என்ற ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அனைவரையும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.