MASUBRAMNIAN
மருத்துவர் காலிப் பணியிடங்கள் குற்றச்சாட்டில் சீமான் அப்டேட் இல்லாமல் இருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடலூர்: கடலூரில் இன்று (நவ.7) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைகளில் ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அரசு மருத்துவமனைகள் குறித்தான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன்பு தான் 20க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் டீன்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர் எனக் கூறினார். தற்போது, டீன்கள் பணி நியமனம் பற்றி சீமான் அப்டேட் இல்லாமல் இருந்து வருகிறார். அரசியல் கட்சி சார்ந்தவர் இப்படி அப்டேட் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது” என்றார்.
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு தேர்வு வாரியத்தால் நான்கு முறை மருத்துவர்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும், கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்தத் தேர்வுகள் நடைபெறவில்லை. 2021ஆம் ஆண்டுத் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் அதே அவலநிலையே தொடர்ந்து வருகிறது என சீமான் குற்றம் சாட்டி இருந்தார்.
இதையும் படிங்க: பச்சை துரோகி… என் எதிரிக்கு கைக்கூலி : பிரபல நடிகரை விளாசிய இயக்குநர்!
அது மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரத்து 553 மருத்துவர் பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று அறிவித்து ஓராண்டு முடிவடையும் நிலையில், இன்று வரை ஒரு மருத்துவர்கள் கூட நியமனம் செய்யப்படவில்லை என்றும், தற்போது மருத்துவ காலிப் பணியிடங்கள் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்றும் சீமான் தெரிவித்திருந்தார்.
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.