அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கின் FIR கசிந்தது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான முறையீட்டை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இதனையடுத்து, தமிழக அரசு, பல்கலைக்கழகம் தரப்பில் பதிலளிக்க நேற்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல் தகவல் அறிக்கையை போலீசார் கசியவிடவில்லை என அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு, “அப்படியென்றால் சிட்டிசன் போர்ட்டலில் இருந்து 14 பேர் பார்த்தார்கள், அவர்களிடம் விசாரிக்கிறோம் என சொல்கிறீர்களே? FIR கசியாமலா விசாரிப்பதாக சொல்கிறீர்கள்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத் தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன், “துரதிருஷ்டவசமான இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பில் உள்ள பல்கலைக்கழக வளாத்திற்கு மொத்தம் 8 வழிகள் உள்ளன.
இந்த அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் மொத்தம் 988 கேமராக்கள் உள்ளன. அவற்றில் 849 கேமராக்கள் செயல்படுகின்றன, மற்றவை செயல்படவில்லை. மாதந்தோறும் கேமராக்கள் செயல்படுகிறதா என சோதனை செய்யப்படுகிறது.
இந்தச் சம்பவத்துக்குப் பின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த போலீஸ் விசாரணைக்கு, அண்ணா பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு வழங்குகிறது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், “மாணவி அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்.
இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்… 2025ஆம் ஆண்டு ரெண்டு பரிசு காத்திருக்கு!
மாணவியின் பெற்றோருக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும். மாணவியின் அடையாளத்தை FIR-இல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. முதல் தகவல் அறிக்கையில் உள்ள வார்த்தைகளும் கண்ணியத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், எஃப்ஐஆரில் மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை.
எனவே, சென்னை காவல்துறை ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். FIR வெளியாவது புகார் அளித்தவரின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த மாணவி படிப்பை தொடர அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.