தமிழகம்

சென்னை போலீஸ் கமிஷ்னர் அருண் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணை!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கின் FIR கசிந்தது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான முறையீட்டை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இதனையடுத்து, தமிழக அரசு, பல்கலைக்கழகம் தரப்பில் பதிலளிக்க நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல் தகவல் அறிக்கையை போலீசார் கசியவிடவில்லை என அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு, “அப்படியென்றால் சிட்டிசன் போர்ட்டலில் இருந்து 14 பேர் பார்த்தார்கள், அவர்களிடம் விசாரிக்கிறோம் என சொல்கிறீர்களே? FIR கசியாமலா விசாரிப்பதாக சொல்கிறீர்கள்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத் தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன், “துரதிருஷ்டவசமான இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பில் உள்ள பல்கலைக்கழக வளாத்திற்கு மொத்தம் 8 வழிகள் உள்ளன.

இந்த அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் மொத்தம் 988 கேமராக்கள் உள்ளன. அவற்றில் 849 கேமராக்கள் செயல்படுகின்றன, மற்றவை செயல்படவில்லை. மாதந்தோறும் கேமராக்கள் செயல்படுகிறதா என சோதனை செய்யப்படுகிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த போலீஸ் விசாரணைக்கு, அண்ணா பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு வழங்குகிறது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், “மாணவி அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்… 2025ஆம் ஆண்டு ரெண்டு பரிசு காத்திருக்கு!

மாணவியின் பெற்றோருக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும். மாணவியின் அடையாளத்தை FIR-இல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. முதல் தகவல் அறிக்கையில் உள்ள வார்த்தைகளும் கண்ணியத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், எஃப்ஐஆரில் மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை.

எனவே, சென்னை காவல்துறை ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். FIR வெளியாவது புகார் அளித்தவரின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த மாணவி படிப்பை தொடர அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

Hariharasudhan R

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

1 day ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

1 day ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

1 day ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

1 day ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

1 day ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

1 day ago

This website uses cookies.