மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஆவின் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகம் தாமதமானதால், பொதுமேலாளரின் வீட்டை முற்றுகையிட்டு முகவர்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்ட சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான பால் பண்ணை மூலமாக ஆவின் டெப்போக்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாவே பால் உற்பத்தியாளர்கள் ஆவின் பால் பண்ணைக்கு, பால் குறைவாக வழங்கிவரும் நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பல்வேறு ஆவின் பால் டெப்போக்களுக்கு வழங்க வேண்டிய பால் பாக்கெட்கள் தாமதமாக விநியோகிக்கப்பட்டதாக முகவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து இன்று ஆவின் பால் பண்ணைக்கு நேரில் சென்று கேட்டபோது, அதிகாரிகள் உரிய பதில் அளிக்காத நிலையில், ஆவின் மண்டல பொதுமேலாளரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.உரிய நேரத்தில் பால்பாக்கெட்டுகளை வழங்காத நிலையில் முகவர்களும், நுகர்வோரும் கடுமையாக பாதிப்புக்குள்ளாவதாக தெரிவித்தனர்.
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளான பால் விலை உயர்வு, உடனடி பணம் வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை நிறைவேற்றாத நிலையில், மதுரை ஆவினில் அவ்வப்போது பால் பாக்கெட்டுகள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் ஆவின் பால் விநியோகம் தடையின்று மேற்கொள்ள பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று உத்தரவிட்ட நிலையில், மறுநாளே ஆவின் பால் விநியோகம் தாமதமாகியுள்ளதாக முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.