உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக விழா கமிட்டினர் தெரிவித்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியானது, வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் வரும் 2023ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் அவனியாபுரம் கிராமத்தினர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனிடையே, இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூறி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சம்பிரதாய முறைப்படி பழங்கள் வைக்கப்பட்ட தட்டுகளை வழங்கி ஜல்லிக்கட்டு போட்டி குறித்தான ஆலோசனைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து விழா கமிட்டியினர் பேசியதாவது :- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது. அரசின் விதிகளுக்கு உட்பட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்துள்ளோம்.
நாளை அலங்காநல்லூரில் விழா கமிட்டியினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரிகள் உள்ளிட்டோர் விழாவை நடத்துவது தொடர்பான ஆலோசனை ஈடுபட உள்ளோம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விழாவிற்கு முதலமைச்சரை அழைக்க உள்ளோம். ஆன்லைன் மூலமாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான டோக்கன் வழங்குவது குறித்து அரசை முடிவெடுக்கும், என தெரிவித்தனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.