மதுரை : மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பரதம் ஆடிக் கொண்டிருக்கும் போதே, பரதநாட்டியக் கலைஞர் மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த காளிதாஸுக்கு (54) பானுமதி என்னும் மனைவியும், பரதக் கலைஞரான பிரியதர்ஷினி என்னும் மகளும், மிருதங்க கலைஞரான விஷ்வ ஹர்ஷன் என்னும் மகனும் உள்ளனர். காளிதாஸ் குடும்பத்தோடு, திருமோகூரில் வசித்து வந்தார்.
தனியார் பள்ளியில் நடன ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், பிரிய கலாலயா என்னும் பரத நாட்டிய பயிற்சி பள்ளியையும் நடத்தி வந்தார். பரதநாட்டிய கலைஞரான மகள் பிரியதர்ஷினியுடன் பல மேடைகளில் அரங்கேற்றம் செய்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் விழாவின் ஒரு பகுதியாக, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில்,மகளுடன் பரதம் ஆடிக்கொண்டிருந்த காளிதாஸ், திடீரென மேடையிலேயே சரிந்து விழுந்தார்.இதனால், அதிர்ந்து போன அவரது குடும்பத்தினர், மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை துாக்கியுள்ளனர். ஆனால், அப்பவே அவர் உயிரிழந்து விட்டார். இதைத் தொடர்ந்து, அவரது இல்லத்தில் நேற்று இறுதிச் சடங்கு நடந்தது.
கணவனின் மறைவு குறித்து பேசிய மனைவி பானுமதி, திடீர் இறப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை என்றும், சில நாட்களுக்கு முன் கூட சர்க்கரை அளவு சீராக இருந்ததை உறுதி செய்ததாகவும் அவர் கூறினார்.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.