மதுரை : மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பரதம் ஆடிக் கொண்டிருக்கும் போதே, பரதநாட்டியக் கலைஞர் மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த காளிதாஸுக்கு (54) பானுமதி என்னும் மனைவியும், பரதக் கலைஞரான பிரியதர்ஷினி என்னும் மகளும், மிருதங்க கலைஞரான விஷ்வ ஹர்ஷன் என்னும் மகனும் உள்ளனர். காளிதாஸ் குடும்பத்தோடு, திருமோகூரில் வசித்து வந்தார்.
தனியார் பள்ளியில் நடன ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், பிரிய கலாலயா என்னும் பரத நாட்டிய பயிற்சி பள்ளியையும் நடத்தி வந்தார். பரதநாட்டிய கலைஞரான மகள் பிரியதர்ஷினியுடன் பல மேடைகளில் அரங்கேற்றம் செய்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் விழாவின் ஒரு பகுதியாக, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில்,மகளுடன் பரதம் ஆடிக்கொண்டிருந்த காளிதாஸ், திடீரென மேடையிலேயே சரிந்து விழுந்தார்.இதனால், அதிர்ந்து போன அவரது குடும்பத்தினர், மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை துாக்கியுள்ளனர். ஆனால், அப்பவே அவர் உயிரிழந்து விட்டார். இதைத் தொடர்ந்து, அவரது இல்லத்தில் நேற்று இறுதிச் சடங்கு நடந்தது.
கணவனின் மறைவு குறித்து பேசிய மனைவி பானுமதி, திடீர் இறப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை என்றும், சில நாட்களுக்கு முன் கூட சர்க்கரை அளவு சீராக இருந்ததை உறுதி செய்ததாகவும் அவர் கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.