அரசு மதுபானக் கடைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம்பெறக் கோரி மதுரை பாஜகவினர் ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளனர்.
மதுரை: தமிழக அரசு நடத்துகின்ற அரசு மதுபானக் கடைகளில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நூதன முறையில் பாஜகவினர் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் பிரச்சார பிரிவு மதுரை மாவட்ட பார்வையாளர் சரவணன் பேட்டி அளித்துள்ளார்.
அதில் பேசிய அவர், “தமிழகத்தில் அரசு நடத்துகின்ற மதுபானக் கடைகளில் 318 கடைகள் பாதியாக குறைக்க வேண்டும் என்பதே வேண்டுகோள். ஆனால், தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி, தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் என பேசினார். தற்போது கடந்த நான்கு ஆண்டுகளில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என நினைக்கிறேன்.
எங்களுக்கு தேவை பூரண மதுவிலக்கு. இது வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். எனவே, தமிழக அரசு நடத்துகின்ற மதுபானக் கடைகளில் முதல்வர் புகைப்படம் இடம்பெற வேண்டும். கூட்டுறவு மருந்து கடைகள், அரசு அலுவலகங்கள், நியாய விலைக் கடைகள் என அனைத்திலும் முதல்வர் படம் உள்ள நிலையில், தமிழக அரசு நடத்துகின்ற மதுபானக் கடைகளில் ஏன் முதல்வர் புகைப்படம் வைக்க கூடாது என மதுப்பிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: திமுக அனுதாபிக்கே அப்படினா.. நிர்வாகிக்கு? கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்!
அதன் விளைவாகவே, தற்போது மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, முதல்வர் புகைப்படத்துடன் மனு அளிக்க வந்ததாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வைகோவைப் போல் திருமாவளவனையும் திமுகவினர் காலி செய்கிறார்கள் என தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை: தமிழக வெற்றிக்…
IPL 2025 தொடரின் 8ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று இரவு…
இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி, ஒன்று தவெக; மற்றொன்று திமுக என விஜய் கூறியுள்ளார். சென்னை:…
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
This website uses cookies.