Categories: தமிழகம்

மதுரையில் விட்டதை கோவையில் தட்டித்தூக்கிய காளை: பெருமையுடன் பரிசை பெற்ற வீரத்தமிழச்சி…!!

கோவை: கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் யோக தர்ஷினி என்ற மாணவியின் காளை வெற்றி பெற்றதை அடுத்து அவர் பரிசை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றார்.

கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 700 காளைகளும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த வீரத்தமிழச்சி என்று டிரெண்ட் ஆன யோகதர்ஷினி என்ற மாணவியும் கலந்து கொண்டார்.

முன்னதாக அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாணவி யோகதர்ஷினி தனது காளையை களமிறக்கினார். இந்த போட்டியில் யோகதர்ஷினியின் காலை பிடி மாடு ஆனது. இதனால் அவருக்கு பரிசு கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு ஆறுதல் பரிசு வழங்க அமைச்சர் மூர்த்தி மைக்கில் யோகதர்ஷினியை அழைத்தார். ஆனால் தனக்கு ஆறுதல் பரிசு தேவையில்லை எனது மாடு எப்போது வெற்றி பெறுகிறதோ அப்போது பரிசை பெற்றுக் கொள்கிறேன் எனக்கூறிவிட்டு யோகதர்ஷினி நடையை கட்டினார். இது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி ‘ வீரத்தமிழச்சி’ என்று பலராலும் அழைக்கப்பட்டார் யோகதர்ஷினி.

இந்நிலையில் இவர் தனது காளையுடன் இன்று கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டார். மேலும் இந்த போட்டியில் அவரது காளை வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து யோகதர்ஷினிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தங்க நாணயம், தண்ணீர் அண்டா , ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினார்.

இதுகுறித்து யோகதர்ஷினி கூறுகையில், ” நான்கு வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன். கோவைக்கு முதன்முறையாக வந்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளேன். அவனியாபுரத்தில் எனது மாடு பிடி மாடு ஆனதால் நான் பரிசு பெறவில்லை. தற்போது எனது காளை வெற்றி பெற்றுள்ளது. அமைச்சர் கையால் பரிசுகளை பெற்றுள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது.” என பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

32 minutes ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

2 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

2 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

3 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

4 hours ago

ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?

சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…

4 hours ago

This website uses cookies.