மதுரை மாமன்ற கூட்டத்தில் திமுக உட்கட்சி பூசல் எதிரொலியாக மாநகராட்சி அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு காவல்துறையினர் குவிப்பால் பரபரப்பு நிலவி வருகிறது.
மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக வந்த தகவலையடுத்து, மதுரை மாநகராட்சி பகுதியில் காவல்துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கூட்டத்திற்கு வரக்கூடிய மாமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் பலத்த சோதனைக்கு பின்பாகவே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாமன்ற உறுப்பினர்களின் செல்போன்கள் வாங்கி வைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
மாநகராட்சி முழுவதிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான நிலை காணப்படுகிறது. மாநகராட்சி மேயர் இந்திராணி நிதியமைச்சரின் ஆதரவாளர் என்பதால், மாவட்ட செயலாளர் கோ தளபதி மற்றும் அமைச்சர் பி.மூர்த்தியின் ஆதரவாளர்கள் தங்களது பகுதிகளுக்கு எந்தப் பணிகளையும் மேயர் மேற்கொள்ளவில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
This website uses cookies.