தமிழகம்

விஜய்க்கு மதுரையில் நெருக்கடி.. கூண்டோடு தூக்கிய நகராட்சி!

தவெக சார்பில் மதுரையில் வழங்கப்பட்டு வந்த விலையில்லா விருந்தகத்தின் பூத் அகற்றப்பட்டது அரசியல் அழுத்தம் என அக்கட்சி நிர்வாகி கூறியுள்ளார்.

மதுரை: கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், அதன் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்னும் கிராமத்தில் நடத்தினார். இதில், இனிமேல் நாம் செய்யும் ஒவ்வொன்றையும் சரியாக செய்ய வேண்டும், நம்மை பலரும் கண்காணிப்பர் என விஜய் கூறியிருந்தார்.

இந்த நிலையில், விலையில்லா விருந்தகம் என்ற திட்டத்தையும் விஜய் தொடங்கி வைத்திருந்தார். அந்த வகையில், மதுரை தவெக சார்பாக விலையில்லா விருந்தகம் என்ற பேரில், மதுரை மத்திய தொகுதி நிர்வாகி சிராஜுதீன் தலைமையில், தினமும் சுமார் 250க்கும் மேற்பட்ட ஏழை, எளிய  மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, மதுரை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேதாஜி ரோடு பகுதியில், மத்திய தொகுதி நிர்வாகிகள் இந்த தினசரி விலையில்லா விருந்தகம் மூலம் ஏழை உணவு வழங்கி வந்தனர். இதற்காக பூத் ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் வைத்து தான் நிர்வாகிகள் உணவளித்து வந்தனர்.

ஆனால், இந்த விருந்தகம் மூலம் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அதேநேரம் இதற்காக முறையான அனுமதி பெறாமலே செயல்பட்டு வந்ததாகவும் கூறி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்றைய முன்தினம் அந்த விலையில்லா விருந்தகத்தின் பூத்தை அகற்றி உள்ளது.

எனவே, மதுரை மத்திய தவெகவினர் வேறு ஒரு இடத்தில் தற்காலிக பூத் அமைத்து நேற்று விருந்தகம் சார்பில் உணவு வழங்கினர். மேலும், இது குறித்து இதுகுறித்து தவெக மத்திய தொகுதி நிர்வாகி சிராஜுதீன் ஊடகத்திடம் கூறுகையில், “கடந்த 150 நாட்களாக ஏழை எளிய மக்கள், நடைபாதை வியாபாரிகள், பாதசாரிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் இந்த விலையில்லா விருந்தகம் மூலம் தினசரி உணவு வழங்கப்பட்டு வந்தது.

அந்த நாள் வரையில் மாநகராட்சி சார்பில் எந்தவித தடையும், இடையூறும் இல்லாமல் பொதுமக்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டு வந்தது. தவெக முதல் மாநில மாநாடு நடந்த முடிந்த பிறகு தான் பல்வேறு நெருக்கடிகளை எங்களுக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் என்று மாநகராட்சி அதிகாரிகள் எங்களிடமே கூறுகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊற்றிக் கொடுத்த PET சார்.. மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை.. திருச்செந்தூர் வழக்கில் திருப்பம்!

அதேநேரம், இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் பிரபல ஊடகத்திடம் கூறுகையில், “தமிழக வெற்றிக் கழகத்தினர் உணவு வழங்குவது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதால், அந்த பூத்தினை மதுரை மாநகராட்சி அகற்ற வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

இதன் பேரில் தான் அந்த பூத் அகற்றப்பட்டது. விலையில்லா விருந்தகம் மூலம் உணவு வழங்க போலீசார் உரிய அனுமதி அளித்தால், மதுரை மாநகராட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” எனக் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தால் தவெகவினருக்கு புது சிக்கல் வந்துள்ளது.

Hariharasudhan R

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

12 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

13 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

14 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

15 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

16 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

17 hours ago

This website uses cookies.