தமிழகம்

விஜய்க்கு மதுரையில் நெருக்கடி.. கூண்டோடு தூக்கிய நகராட்சி!

தவெக சார்பில் மதுரையில் வழங்கப்பட்டு வந்த விலையில்லா விருந்தகத்தின் பூத் அகற்றப்பட்டது அரசியல் அழுத்தம் என அக்கட்சி நிர்வாகி கூறியுள்ளார்.

மதுரை: கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், அதன் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்னும் கிராமத்தில் நடத்தினார். இதில், இனிமேல் நாம் செய்யும் ஒவ்வொன்றையும் சரியாக செய்ய வேண்டும், நம்மை பலரும் கண்காணிப்பர் என விஜய் கூறியிருந்தார்.

இந்த நிலையில், விலையில்லா விருந்தகம் என்ற திட்டத்தையும் விஜய் தொடங்கி வைத்திருந்தார். அந்த வகையில், மதுரை தவெக சார்பாக விலையில்லா விருந்தகம் என்ற பேரில், மதுரை மத்திய தொகுதி நிர்வாகி சிராஜுதீன் தலைமையில், தினமும் சுமார் 250க்கும் மேற்பட்ட ஏழை, எளிய  மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, மதுரை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேதாஜி ரோடு பகுதியில், மத்திய தொகுதி நிர்வாகிகள் இந்த தினசரி விலையில்லா விருந்தகம் மூலம் ஏழை உணவு வழங்கி வந்தனர். இதற்காக பூத் ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் வைத்து தான் நிர்வாகிகள் உணவளித்து வந்தனர்.

ஆனால், இந்த விருந்தகம் மூலம் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அதேநேரம் இதற்காக முறையான அனுமதி பெறாமலே செயல்பட்டு வந்ததாகவும் கூறி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்றைய முன்தினம் அந்த விலையில்லா விருந்தகத்தின் பூத்தை அகற்றி உள்ளது.

எனவே, மதுரை மத்திய தவெகவினர் வேறு ஒரு இடத்தில் தற்காலிக பூத் அமைத்து நேற்று விருந்தகம் சார்பில் உணவு வழங்கினர். மேலும், இது குறித்து இதுகுறித்து தவெக மத்திய தொகுதி நிர்வாகி சிராஜுதீன் ஊடகத்திடம் கூறுகையில், “கடந்த 150 நாட்களாக ஏழை எளிய மக்கள், நடைபாதை வியாபாரிகள், பாதசாரிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் இந்த விலையில்லா விருந்தகம் மூலம் தினசரி உணவு வழங்கப்பட்டு வந்தது.

அந்த நாள் வரையில் மாநகராட்சி சார்பில் எந்தவித தடையும், இடையூறும் இல்லாமல் பொதுமக்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டு வந்தது. தவெக முதல் மாநில மாநாடு நடந்த முடிந்த பிறகு தான் பல்வேறு நெருக்கடிகளை எங்களுக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் என்று மாநகராட்சி அதிகாரிகள் எங்களிடமே கூறுகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊற்றிக் கொடுத்த PET சார்.. மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை.. திருச்செந்தூர் வழக்கில் திருப்பம்!

அதேநேரம், இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் பிரபல ஊடகத்திடம் கூறுகையில், “தமிழக வெற்றிக் கழகத்தினர் உணவு வழங்குவது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதால், அந்த பூத்தினை மதுரை மாநகராட்சி அகற்ற வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

இதன் பேரில் தான் அந்த பூத் அகற்றப்பட்டது. விலையில்லா விருந்தகம் மூலம் உணவு வழங்க போலீசார் உரிய அனுமதி அளித்தால், மதுரை மாநகராட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” எனக் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தால் தவெகவினருக்கு புது சிக்கல் வந்துள்ளது.

Hariharasudhan R

Recent Posts

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

13 minutes ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

51 minutes ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

14 hours ago

சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…

14 hours ago

தோனி சிக்ஸர் ரொம்ப முக்கியமா..கோட்டை விடும் CSK..முன்னாள் வீரர் காட்டம்.!

CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…

16 hours ago

இது தானா..எதிர்பார்த்த நாளும் இதுதானா..நடிகை திரிஷா போட்டோ வைரல்..ரசிகர்கள் வாழ்த்து.!

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…

17 hours ago

This website uses cookies.