மதுரை துணை மேயர் வீட்டில் ரவுடிகள் தாக்குதல்… அலுவலகத்தையும் அடித்து உடைத்ததால் பரபரப்பு ; போலீசார் குவிப்பு!!

Author: Babu Lakshmanan
9 January 2024, 7:45 pm

மதுரை ; மதுரை மாநகராட்சியின் துணை மேயரின் அலுவலகம் மற்றும் வீட்டின் முன்பு ரவுடிகள் சிலர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருப்பவர் நாகராஜ். இவர் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள நேதாஜி தெருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டின் முன்பு ரவுடிகள் இருவர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதேபோல, ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் இருக்கும் வீரகாளியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள அவரது அலுவலகம் முன்பும் இதே ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிறகு, அலுவலக கண்ணாடியை உடைத்து விட்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, அங்கு இருப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிததனர். அதன்பேரில், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…