மதுரை ; மதுரை மாநகராட்சியின் துணை மேயரின் அலுவலகம் மற்றும் வீட்டின் முன்பு ரவுடிகள் சிலர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருப்பவர் நாகராஜ். இவர் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள நேதாஜி தெருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டின் முன்பு ரவுடிகள் இருவர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதேபோல, ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் இருக்கும் வீரகாளியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள அவரது அலுவலகம் முன்பும் இதே ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிறகு, அலுவலக கண்ணாடியை உடைத்து விட்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, அங்கு இருப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிததனர். அதன்பேரில், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.