தமிழகம்

சென்னையை விட மதுரையில் தாறுமாறு வரி.. மதுரை கம்யூ., கட்சி துணை மேயர் திடீர் அதிருப்தி!!

மதுரை மாநகராட்சியின் 32 வது மாமன்ற கூட்டம் மதுரை மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியுள்ளது, இக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மதுரை துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 10 ஏக்கர் பரப்பளவில் 2 கட்டமாக டைடல் பூங்கா அமைக்கப்படும்” என அறிவித்தார்.

Phase 1 டைடல் பூங்கா அமைக்க 5.60 ஏக்கர் நிலத்தை மாநகராட்சி வழங்கியது, தற்போது டைடல் பூங்கா நிறுவனம் Phase 1 டைடல் பூங்கா அமைக்க கூடுதல் நிலம் கேட்டு கடிதம் அனுப்பியது.

அதன் அடிப்படையில் கூடுதலாக 4 எக்கர் நிலம் என மொத்தமாக 9.60 ஏக்கர் நிலம் வழங்கி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாமன்ற கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன் பேசுகையில், பந்தல்குடி கால்வாயை முன்கூட்டியே தூர்வார இருக்க வேண்டும் நாம் கவன குறைவாக இருந்து விட்டோம்.

செல்லூர் கான்மாய் நிரம்பி வழிவதை வைகை ஆற்றுக்குள் கூடுதலாக ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும், 18 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டி புதர் மண்டி கிடக்கின்றது.

மாநகராட்சி நிதி பற்றாக்குறை நெருக்கடி அதிகமாக உள்ளது, மாநகராட்சியில் 46 கோடி ரூபாய்க்கு மேலாக சொத்து வரி பாக்கி உள்ளது, இதில் மத்திய அரசு நிறுவனங்கள் 8 கோடி ரூபாய்க்கு மேலாக பாக்கி வைத்துள்ளார்கள்.

சொத்துக்கள் ஏலம் விடும் நடைமுறை கைவிடப்பட்டதால் சொத்து வரி நிலுவையில் உள்ளது, மாநகராட்சி வாரச் சந்தைகளால் கிடைக்கும் வருவாய் 10 இல் 1 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. சென்னையை விட மதுரையில் மட்டுமே குப்பை வரி அதிகமாக வசூல் செய்யப்படுகிறது” என பேசினார்.

துணை மேயர் பேசி கொண்டிருக்கும் போதே துணை மேயரின் பேச்சை நிறுத்துமாறு திமுக மாமன்ற உறுப்பினர்கள் குறுக்கீடு செய்தனர்.

ஆலோசனை கூட்டத்தில் துணை மேயர் தங்களுடைய கருத்துகளை பேச வேண்டும் என திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள்.

இதற்கு பதிலளித்த துணை மேயர் நாகராஜன் “மாநகராட்சியில் ஆலோசனை கூட்டத்திற்கு என்னை அழைப்பதில்லை, என்னை அனுமதித்தால் தானே மக்கள் பிரச்சினைகளை பேச முடியும்” என கூறினார்,

இதனையடுத்து துணை மேயர் நாகராஜன் தன்னுடைய பேச்சை நிறுத்திக் கொண்டார். மதுரை மாநகராட்சி 77 வார்டு மாமன்ற உறுப்பினர் மாயத்தேவன் பேசுகையில் “பாதாள சாக்கடை அமைப்புகளை நீக்க பயன்படுத்தப்படும் சூப்பர் சக்கரா வாகனம் வி.ஐ.பி வார்டுகளுக்கு மட்டும் செல்லுமா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பேசுகையில் “மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளும் வி.ஐ.பி வார்டுகள் தான், பணிகளின் முக்கியத்துவம் கருதி பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது” என கூறினார்.

இதையும் படியுங்க: விஜய் மாநாட்டுக்கு வருபவர்கள் இப்படியெல்லாம் வரக்கூடாது : மின்வாரியத்துறை கண்டிஷன்..!!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் கூறுகையில் “மதுரையில் உள்ள பாசன கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதினேன், கடிதம் எழுதி 6 மாதங்கள் ஆகியும் பொதுப்பணித்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாசன கால்வாய்களை வைகை ஆற்றுடன் இணைக்க திட்டம் கொண்டு வரப்பட வேண்டும், மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகாலை தூர் வார வேண்டும், மழை பாதிப்புகளில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

மழை காலங்களுக்கு முன்னதாக மழைநீர் வடிகால் தூர்வாரவில்லை, கூட்டணி என்பது வேறு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டம் குணம் என்பது வேறு, மாநகராட்சிக்கு வர வேண்டிய வரிகளை வசூல் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், வரி தொடர்பாக நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், வரி வசூல் செய்வதிலும் மாநகராட்சி தொய்வாக செயல்படுகிறது.

மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்து உள்ளவர்கள் குறித்த விபரங்களை அறிக்கையாக வெளியீட வேண்டும்” என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

6 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

7 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

7 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

8 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

8 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

8 hours ago

This website uses cookies.