தமிழகம்

சென்னையை விட மதுரையில் தாறுமாறு வரி.. மதுரை கம்யூ., கட்சி துணை மேயர் திடீர் அதிருப்தி!!

மதுரை மாநகராட்சியின் 32 வது மாமன்ற கூட்டம் மதுரை மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியுள்ளது, இக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மதுரை துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 10 ஏக்கர் பரப்பளவில் 2 கட்டமாக டைடல் பூங்கா அமைக்கப்படும்” என அறிவித்தார்.

Phase 1 டைடல் பூங்கா அமைக்க 5.60 ஏக்கர் நிலத்தை மாநகராட்சி வழங்கியது, தற்போது டைடல் பூங்கா நிறுவனம் Phase 1 டைடல் பூங்கா அமைக்க கூடுதல் நிலம் கேட்டு கடிதம் அனுப்பியது.

அதன் அடிப்படையில் கூடுதலாக 4 எக்கர் நிலம் என மொத்தமாக 9.60 ஏக்கர் நிலம் வழங்கி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாமன்ற கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன் பேசுகையில், பந்தல்குடி கால்வாயை முன்கூட்டியே தூர்வார இருக்க வேண்டும் நாம் கவன குறைவாக இருந்து விட்டோம்.

செல்லூர் கான்மாய் நிரம்பி வழிவதை வைகை ஆற்றுக்குள் கூடுதலாக ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும், 18 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டி புதர் மண்டி கிடக்கின்றது.

மாநகராட்சி நிதி பற்றாக்குறை நெருக்கடி அதிகமாக உள்ளது, மாநகராட்சியில் 46 கோடி ரூபாய்க்கு மேலாக சொத்து வரி பாக்கி உள்ளது, இதில் மத்திய அரசு நிறுவனங்கள் 8 கோடி ரூபாய்க்கு மேலாக பாக்கி வைத்துள்ளார்கள்.

சொத்துக்கள் ஏலம் விடும் நடைமுறை கைவிடப்பட்டதால் சொத்து வரி நிலுவையில் உள்ளது, மாநகராட்சி வாரச் சந்தைகளால் கிடைக்கும் வருவாய் 10 இல் 1 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. சென்னையை விட மதுரையில் மட்டுமே குப்பை வரி அதிகமாக வசூல் செய்யப்படுகிறது” என பேசினார்.

துணை மேயர் பேசி கொண்டிருக்கும் போதே துணை மேயரின் பேச்சை நிறுத்துமாறு திமுக மாமன்ற உறுப்பினர்கள் குறுக்கீடு செய்தனர்.

ஆலோசனை கூட்டத்தில் துணை மேயர் தங்களுடைய கருத்துகளை பேச வேண்டும் என திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள்.

இதற்கு பதிலளித்த துணை மேயர் நாகராஜன் “மாநகராட்சியில் ஆலோசனை கூட்டத்திற்கு என்னை அழைப்பதில்லை, என்னை அனுமதித்தால் தானே மக்கள் பிரச்சினைகளை பேச முடியும்” என கூறினார்,

இதனையடுத்து துணை மேயர் நாகராஜன் தன்னுடைய பேச்சை நிறுத்திக் கொண்டார். மதுரை மாநகராட்சி 77 வார்டு மாமன்ற உறுப்பினர் மாயத்தேவன் பேசுகையில் “பாதாள சாக்கடை அமைப்புகளை நீக்க பயன்படுத்தப்படும் சூப்பர் சக்கரா வாகனம் வி.ஐ.பி வார்டுகளுக்கு மட்டும் செல்லுமா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பேசுகையில் “மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளும் வி.ஐ.பி வார்டுகள் தான், பணிகளின் முக்கியத்துவம் கருதி பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது” என கூறினார்.

இதையும் படியுங்க: விஜய் மாநாட்டுக்கு வருபவர்கள் இப்படியெல்லாம் வரக்கூடாது : மின்வாரியத்துறை கண்டிஷன்..!!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் கூறுகையில் “மதுரையில் உள்ள பாசன கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதினேன், கடிதம் எழுதி 6 மாதங்கள் ஆகியும் பொதுப்பணித்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாசன கால்வாய்களை வைகை ஆற்றுடன் இணைக்க திட்டம் கொண்டு வரப்பட வேண்டும், மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகாலை தூர் வார வேண்டும், மழை பாதிப்புகளில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

மழை காலங்களுக்கு முன்னதாக மழைநீர் வடிகால் தூர்வாரவில்லை, கூட்டணி என்பது வேறு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டம் குணம் என்பது வேறு, மாநகராட்சிக்கு வர வேண்டிய வரிகளை வசூல் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், வரி தொடர்பாக நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், வரி வசூல் செய்வதிலும் மாநகராட்சி தொய்வாக செயல்படுகிறது.

மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்து உள்ளவர்கள் குறித்த விபரங்களை அறிக்கையாக வெளியீட வேண்டும்” என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

7 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

8 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

8 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

8 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

8 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

9 hours ago

This website uses cookies.