உசிலம்பட்டி அருகே பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சுரேஷ் டிம்பர்ஸ் எனும் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாக பர்னிச்சர் ஷோ ரூம், மர இழைப்பகம் மற்றும் ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஜவுளிக்கடை, பர்னிச்சர் ஷோரூம், மரக்கடை உள்ளிட்ட மூன்று இடங்களில் தனித்தனியாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து, மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த வருமான வரி சோதனையில் இந் நிறுவனம் வரி ஏற்பு ஏதும் செய்துள்ளனரா? கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளதா என்ற தகவல்கள் சோதனை முடிவில் தெரிய வரும் என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து எழுமலையில் பிரபலமான தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.