மதுரை : மதுரையில் அப்பள கம்பெனிக்குள் புகுந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சிந்தாமணி பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் ராஜமான் நகர் பகுதியில் அப்பள கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று மாலை அவரது கம்பெனிக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதோடு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, அப்பள கம்பெனி உரிமையாளர் திருமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கீரைத்துறை காவல்நிலையத்தில் திருமுருகன் அளித்த புகாரின் கீழ் அப்பள கம்பெனியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் விரதனூர் பகுதியில் திருமுருகன் நிலம் வாங்கியது தொடர்பாக பிரச்சினை காரணமாக அப்பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கும்பல் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கொலை மிரட்டல் விடுத்த விரதனூர் பகுதியை சேர்ந்த முருகேசன், சிவக்குமார், செல்வப்பாண்டி, சமையன், சந்தோஷ் குமார் ஆகியோரை கீரைத்துறை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.