மதுரையில் கனமழை பெய்த போது, அரசு பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் முழுவதுமாக நனைந்தபடி பெண்கள் பயணித்த சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பேருந்துகளில் உரிய பராமரிப்பு இல்லாத நிலையில் மழை நீர் பேருந்துக்குள் ஒழுகும் நிலை ஏற்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கழுவன்குளம் செல்லக்கூடிய அரசு பேருந்தில் முழுவதுமாக மழைநீர் பேருந்துக்குள் உள்ள இருக்கைகளில் வடிந்து கொண்டே இருந்ததால் பெண் பயணிகள் அமர முடியாத நிலையில் முழுவதுமாக நனைந்தபடி பயணிக்கும் நிலை உருவானது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: மண்டேலா கோட்பாட்டிற்கு எதிரானது… சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை!!
அந்த பேருந்தில் ஒரு பயணி கூட இருக்கையில் அமர முடியாத வகையில் பேருந்து இருக்கைகள் அனைத்திலும் மழைநீர் தொடர்ந்து அருவி போல கொட்டியதால் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். குறிப்பாக அதிக அளவிற்கு பெண் பயணிகள் பயணித்த சூழலில் இது போன்று மழை நீரில் ஆடைகள் நனைந்தபடி சிரமத்திற்கு மத்தியில் அரசு பேருந்து பயணித்தனர்.
அரசு பேருந்துகளின் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்தான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்துதுறை கூறிய நிலையில் தொடர்ச்சியாக மதுரை மண்டல போக்குவரத்து துறையின் கீழ் பல்வேறு அரசு பேருந்துகள் பராமரிப்பு இன்றி செயல்படுவதற்கு சாட்சியாக மழைநீர் வடிந்த அரசு பேருந்து அமைந்தது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.