அங்காடித்தெரு பாணியில் மலர்ந்த தகாத காதல்… லாட்ஜில் ரூம் எடுத்த ஜோடி ; போலீஸுக்கு வந்த திடீர் அழைப்பு…!!
மதுரை அருகே பெற்றோர் கண்டித்ததால் கள்ளக்காதலனுடன் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (38) என்பவர் திருமணமான ஒரு மாதத்தில் தனது மனைவியை பிரிந்த நிலையில், மாட்டுத்தாவனி அருகே உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை அடுத்த அரும்பனூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சனி (25) என்பவர் தனது கணவனை பிரிந்து ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையுடனும் வாழ்ந்து வரும் நிலையில், இவரும் அதே கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். ஒரே தளத்தில் இருவரும் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 6 மாத காலமாக இருவருக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
இருவரும் ஜவுளிகடைக்கான பணியாளர்கள் தங்கும் விடுதியில் தங்கிவந்தாலும் கூட, அவ்வப்போது மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பிரஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அடிக்கடி அறை எடுத்து தங்கி வந்துள்ளனர்.
இதுபோன்று நேற்று மதியமும் அறையெடுத்து இருவரும் தங்கியுள்ள நிலையில், இன்று காலை அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதை கண்டு விடுதியின் மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். புதூர் காவல்துறையினர் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து பார்த்த போது இருவரும் விஷம் அருந்தி சடலமாக கிடந்தனர்.
இதனையடுத்து, இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் இருவரின் கள்ளக்காதல் ரஞ்சனியின் வீட்டாருக்கு தெரியவர இரண்டு குழந்தைகள் உள்ளது. இது வேண்டாம், அசிங்கம் என பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த ரஞ்சனி கள்ளக்காதலர் கார்த்திகேயனுடன் விஷமருந்தி தற்கொலை செய்தது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.