மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த பெற்றோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை சொக்கலிங்க நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (56) – குருவம்மாள் (54) தம்பதிகள் வீட்டின் அருகே வடைக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இளைய மகன் மாரி செல்வம் (வயது 25) தொழில்கல்வி படிப்பில் இடைநிற்றலில் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
மேலும், குடிப்பழக்கத்திற்கு ஆளான மாரிச்செல்வம் குடிப்பதற்காக பணம் கேட்டு தாய் தந்தையிரிடம் அடிக்கடி தொந்தரவு செய்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், நேற்று இரவு அளவுக்கு அதிகமான மது போதையில் வீட்டிற்கு வந்த மாரிசெல்வம் பெற்றோர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பெற்றோர் மாரி செல்வத்தின் கழுத்தில் ஸ்கிப்பிங் கயிறை கொண்டு நெறித்து கொலை செய்துவிட்டு மதுரை எஸ்எஸ் காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரி செல்வத்தின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு நாகராஜ், குருவம்மாள் மற்றும் மூத்த மகன் ஆகியோரிடம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…
உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம் என சரத்குமார் கூறியுள்ளார். பெரம்பலூர்:…
படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2015ல் வேல்ராஜ் இயக்கத்தில்…
This website uses cookies.