மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மருது சகோதரர்களின் பெயர்கள் மறைக்கப்படுவதற்கு மருது சேனை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மருது சேனை கட்சியை சேர்ந்த ஆதி நாராயணன், மீனாட்சி அம்மன் கோவிலில் மருது சகோதரர்கள் அளித்த உதவிகள் மானியங்கள் நன்மைகள் என அனைத்தும் குறைக்கப்படுவதாக கூறி, அது சார்ந்த அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலர்களிடமும் மனு அளித்திருந்தார் தொடர்ந்து பத்திரிகையாளரிடம் கூறும்போது :- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமன்றி சிவகங்கை சமஸ்தானத்திலும் எண்பத்தி ஒரு கோயிலுக்கும் வழங்கிய நன்மைகளும் மானியங்களும் மறைக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருகல்யாண மண்டபம் அருகில் அகற்றிய மருதுபாண்டியர் சிலையில் இருந்த பெயரை மீண்டும் அமைக்கக் கோரியும், கோவிலுக்கு தானமாக கொடுத்த 1008 திருவாச்சி விளக்குகளில் மருது சகோதரர்களின் பெயர்களை அகற்றியதை கண்டிக்கத்தக்கது.
அரசர்கள் கட்டிய சேர்வைக்காரர் மண்டபம் பெயரையும், கட்டளை உரிமைகளையும் மறுக்கப்பட்டதை கண்டித்து மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தொடர்ந்து மருது இருவர்களின் பெயரை மறைப்பது என்பதே அதிகாரிகளின் அலட்சியப் போக்கு எங்களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டத்தில் இறங்குவோம், எனக் கூறினார்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.