மதுரை : மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு வகையான நாட்டு மீன்களை பிடித்து அசத்தியுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டியிலுள்ள கம்புளியான் கண்மாயி அமைந்துள்ளது. இந்த கண்மாயில் வருடந்தோறும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டு மீன்பிடி திருவிழாவில் சருகுவலையபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுகளான வடக்குவலையபட்டி, தனியமங்கலம், கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இன்று அதிகாலையில் கண்மாயில் வந்து குவிந்தனர்.
அதனை அடுத்து கிராமத்தின் சார்பில் துண்டு வீசப்பட்டு பிறகு அனைவரும் கண்மாயில் ஒன்றாக இறங்கி தங்கள் கையில் வைத்துள்ள மீன் கூடைகள், வலைகள், கச்சா, உள்ளிட்டவைகளை கொண்டு பல்வேறு வகையான மீன்களை பிடித்து அசத்தினர். மேலும், பிடிபட்ட மீன்களான கெலுத்தி, கெண்டை, கட்லா, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்து அசத்தினர்.
மேலும் பிடிபட்ட மீன்களை முதலில் இறைவனுக்கு படைத்து பிறகு தாங்கள் சாப்பிடுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதில் சமூக ஆர்வலர் பூமிநாதன், பிரபு சிவகுமார் கருப்புசாமி ராஜ பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் மீன்களை பிடித்து அசத்தினர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.