மதுரை ; சோழவந்தான் அருகே தாய் மற்றும் மகனை பக்கத்து வீட்டுக்காரர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சோழவந்தான் காடுபட்டி அருகே வசித்து வருபவர் உமா. இவரும், இவரது மகன் செல்லப்பாண்டியும் அவர்களது வீட்டின் முன் சத்தமிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இது பக்கத்து வீட்டில் வசித்து வரும் வாலிபரான செந்தில் குமார் என்பவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஏன் வீட்டின் முன் சத்தமாக பேசுகிறீர்கள்..? எனக் கூறி தாய் – மகனிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்திமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாய் உமா, மகன் செல்லப்பாண்டி ஆகிய இருவரையும் சராமாரியாக கை, கால் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார்.
காயமடைந்த தாய் – மகனை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் அறிந்த காடுபட்டி காவல் நிலைய போலீசார், தாய், மகனை வெட்டிவிட்டு தலைமறைவான செந்தில்குமரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களது வீட்டின் முன்பு சத்தமாக பேசிக் கொண்டிருந்தவர்களை உயிருக்கு ஆபத்தான நிலையில் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.