மதுரை : உசிலம்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த சாமி என்பவரது மனைவி செல்லம்மாள். கணவர் சாமி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மகன், மகளும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், உசிலம்பட்டி வத்தலக்குண்டு நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி செல்லம்மாள், இரவு வழக்கம் போல் உறங்க சென்றார். இன்று காலை முதலே வீட்டை விட்டு வெளியே வராததைக் கண்ட அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு, காவல் ஆய்வாளர் கண்ணாத்தாள் மற்றும் தடயவியல் மற்றும் குற்றப்பிரிவு போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இந்த கொலைக்கான காரணம் குறித்தும், கொலை செய்த மர்ம நபர்கள் குறித்தும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.