மதுரை : மதுரையில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 22ஆம் தேதி மதுரை வளர்நகர் பகுதியில் பாலமுருகன் (எ) டோரா பாலா கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி வினோத் கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி வினோத்தை கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அடையாள அணிவகுப்புக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, ரவுடி வினோத் போலீசாரை வெட்டி விட்டு தப்பி ஓட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், சுதாரித்துக் கொண்ட மாட்டுத்தாவணி போலீசார், அரிவாளால் வெட்ட வந்த ரவுடி வினோத்தை துப்பாக்கியால் சுட்டனர். இதனால், காலில் குண்டு பாய்ந்த நிலையில், சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அரிவாளால் தாக்க முயன்ற பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
This website uses cookies.