மதுரை நத்தம் பறக்கும் பாலத்தின் அதிவேகத்தில் வந்த பைக் பக்கவாட்டு சுவரில் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் வடக்குமாசி வீதி பகுதியை சேர்ந்த ஆனந்த்கிருஷ்ணன் மற்றும் மதுரை பெத்தானியாபுரம் மூலப்பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (24) ஆகிய இருவரும், மதுரை கள்ளந்திரி பகுதியில் உள்ள அவர்களது நண்பரின் கிணற்றில் குளித்துவிட்டு பைக்கில் மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அப்போது, பறக்கும் பாலத்தில் மேல் பைக்கில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது, அவுட்போஸ்ட் அருகே மேம்பாலத்தில் திரும்பும்போது, வளைவில் பக்கவாட்டு சுவர் மீது மோதியது. இதில் வேகமாக பைக் மோதியதில் பைக்கை ஓட்டி வந்த ஆனந்தகிருஷ்ணன் சுவரில் மோதி உயிரழந்த நிலையில், மேம்பாலத்தில் இருந்து பறந்து சென்று கீழே விழுந்து சீனிவாசன் தலை சிதறி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் பக்கவாடடு சுவர்கள் சிறியதாக இருப்பதாலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாத நிலையிலும், இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாத நிலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஒட்டி செல்லும் நிலை உள்ளது. இதுபோன்று நாள்தோறும் ஏராளமான இளைஞர்கள் ஆடம்பர பைக்கில் பைக் ரேஸில் ஈடுபடுவதாலும் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.