திண்டுக்கல் ; மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் ஆவியூர் விளக்கு அருகே கார் டயர் வெடித்து விபத்து அரசு போக்குவரத்து ஊழியர் மற்றும் அவரது தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியைச் சார்ந்தவர் ஆனந்த். இவர், திண்டுக்கல் மாவட்ட அரசு போக்குவரத்து பணிமலையில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனது குடும்பத்துடன் திருச்செந்தூரில் சாமி கும்பிட்டு விட்டு சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு காரில் திரும்பி உள்ளார்.
விருதுநகர் அருகே உள்ள ஆவியூர் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக, காரின் டயர் வெடித்து அருகே இருந்த பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. இதில், கார் ஓட்டி வந்த ஆனந்த் மற்றும் அவரது தாய் மீனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும், காரில் வந்த ஆனந்தின் உறவினர்கள் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு நபர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், நான்கு நபர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஆவியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.