அங்கன்வாடி மையம் முன்பு பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கிய பட்டியலின சுகாதாரப் பெண் பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ; மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி கிராமத்தில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் சேக்கிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக தன்னார்வ சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தனலட்சுமி அவரது கணவருடன் சேக்கிபட்டி ஊராட்சியில் உள்ள உடப்பன்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் முன்பு மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்கி வந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த (மாற்று சமுதாயம் ) அழகன் என்பவர் தனலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அநாகரிகமாக பேசியுள்ளார். அப்போது ,இதனை அருகில் இருந்த அவரது கணவர் செந்தில் தடுக்க முற்பட்டபோது, கட்டையால் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். பின் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தனலட்சுமிக்கு கையில் காயமும் அவரது கணவர் செந்திலுக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தனலட்சுமி மேலவளவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அழகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.