மதுபானக்கடையில் எதிரே அமர்ந்து மது குடித்த நபரின் பைக்கை இளைஞர் ஒருவர் திருடிச் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர்,, புத்தாண்டை கொண்டாடுவதற்காக பாண்டிகோவில் அருகேயுள்ள மதுபான கடை ஒன்றில் மதுகுடிக்க வந்துள்ளார். அப்போது தனது பைக்கை மதுபான கடையின் வெளியே நிறுத்திவைத்துவிட்டு அங்குள்ள மதுபானக்கடையில் மது அருந்தியுள்ளார்.
அப்போது அவருடைய இருக்கைக்கு எதிராக அமர்ந்து மது அருந்திய இளைஞர் ஒருவர் கருப்பையாவுடன் நன்கு பேசிக்கொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து, திடீரென்று வெளியில் செல்வதாக புறப்பட்டுவிட்டார். இதனையடுத்து, கருப்பசாமி சிறிதுநேரம் கழித்து தான் வாகனத்தை நிறுத்திய இடத்தில் தேடியபோது வாகனம் காணாமல் போயிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கருப்பசாமி சில நிமிடங்களில் மதுபானக்கடையில் இருந்த சிசிடிவியை பார்த்தபோது, தனது எதிரில் மது அருந்திகொண்டிருந்த இளைஞர் பைக்கை எடுத்துசெல்வது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, மாட்டுத்தாவணி காவல்நிலையத்தில் இளைஞர் கருப்பசாமி புகார் அளிக்க சென்றபோது காவல்துறையினர் இதுவரை புகார் ஏற்கவில்லை. இந்த நிலையில் பைக் திருடப்பட்ட சிசிடிவி காட்சிகளை சமூகவலைதளங்களை வெளியிட்டு தனது பைக்கை தேடிவருகிறார் கருப்பையா.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.