கண்டா வர சொல்லுங்க மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு எதிராக வண்டியூர் பகுதியில் பொதுமக்கள் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரை வண்டியூர் பகுதியில் கண்டா வரச் சொல்லுங்க…! என்ற வாசகத்துடன் வண்டியூர் , சௌராஷ்டிராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சுவரொட்டியில் மதுரை பாராளுமன்ற தொகுதியில், இரண்டு முறை எம்.பி யாக வெற்றி பெற்றும், வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்ல வராத மதுரை எம்.பி
திரு. சு.வெங்கடேசன் அவர்களே! உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு, இதுவரை நீங்கள் செய்தது என்ன? இப்படிக்கு
வண்டியூர் கிராம பொதுமக்கள் என அச்சிடப்பட்டு வண்டியூர் பகுதி முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளது.
மதுரை வண்டியூர் பகுதிகளில் தற்போது சாலைகள் சேதமடைந்து பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் பகுதிக்கு வரவில்லை எனக்கொரு நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக அரசுக்கு எதிராக இலவச பட்டா கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் 3000 க்கும் மேற்பட்ட பெண்களை பேரணியாக அழைத்து வந்து மனு அளித்த நிலையில் சு.வெங்கடேசனுக்கு எதிராக திடீரென கண்டா்வரச்சொல்லுங்க என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே உள்ள கருத்து மோதலை வெளிப்படுத்துகிறதா? என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது
பொதுமக்கள் பெயரில் நோட்டீஸ் ஒட்டியது திமுகவினரா? என்ற சந்தேகத்தில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர்
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.