Categories: தமிழகம்

மழையிலும் அணையாத மகாதீபம் : உச்சிமலையில் சுடர்விட்டு எரியும் காட்சிகள் இணையத்தில் வைரல்!!

இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி நிறைவடைந்துள்ள நிலையில், தெப்ப உற்சவம் களைகட்டியுள்ளது. இதற்காக அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்அலங்காரம் செய்யப்பட்டு கோயில் ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனது குடும்பத்துடன், கிரிவலத்தின் மகத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அப்பொழுது பக்தர்கள் வழிநெடுகிலும், சாமிக்கு மாலை அணிவித்து, ஆடைகள் வழங்கி, தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.

மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். அண்ணாமலை உச்சியில் தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 16ஆம்தேதி வரை தரிசிக்கலாம்.

திருவண்ணாமலையில் 4ஆம் நாளான இன்றும் மலை உச்சியில் மகா தீபம் சுடர் விட்டு எரிந்து வருகிறது. மாண்டஸ் புயல் காரணமாக மாவட்டத்தில் பெய்து வரும் மழையிலும் மகா தீபம் எரிந்து வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.

தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மூத்த நடிகைகள் தான் வேணும்… அடம் பிடிக்கும் இளம் நடிகர் : கதறும் தயாரிப்பாளர்கள்!

பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…

26 minutes ago

‘STR 50’ கைவிடப்பட்டதா…இயக்குனர் தேசிங் பெரியசாமி சொல்லுவது என்ன.!

யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…

29 minutes ago

சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு? அதிரடி அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்!

சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…

1 hour ago

உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு திடீர் முத்தம்…போலீஸ் கெடுபிடியில் பெண் ரசிகை.!

BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…

1 hour ago

சிறுமலை அருகே ஆண் சடலம்.. சம்பவ இடத்தில் NIA.. திண்டுக்கல்லில் நடப்பது என்ன?

திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…

2 hours ago

மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!

வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…

3 hours ago

This website uses cookies.