மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மின்வாரியத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
வடகடும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டன். இவருக்கு 10 வயதில் ஹேமநாதன் எனும் மகன் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் சென்ற இருவர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் கேட்டு அங்கு திரண்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனிடையே, கடந்த ஓராண்டாக அந்த மின்கம்பி பழுதாகி தாழ்வாக சென்று கொண்டிருந்ததாகவும், பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காததே இரு உயிர்கள் பறிபோனதுக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.