கோவை: கோவையில் வாக்காளர்களுக்கு திமுக கொடுத்த கொலுசு மற்றும் டோக்கனுடன் வந்த மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் நேற்று பிரச்சாரங்களை நிறைவு செய்தனர். இந்நிலையில் திமுகவினர் ஓட்டுக்கு பணம், பொருள், அன்பளிப்பு ஆகியவை கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் திமுகவினர் வாக்காளர்களுக்கு கொலுசு கொடுத்ததாக மக்கள் நீதி மய்யதினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொலுசுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு புகார் தெரிவித்தனர். மேலும் திமுக வேட்பாளர்கள் பல இடங்களில் வாக்காளர்களுக்கு டோக்கன்களை வழங்கி பணத்தை பெற்றுக் கொள்ள அழைப்பதாகவும், எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாக வழங்குகின்றனர் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டுமெனவும், இல்லையென்றால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.