வேலூர் அருகே தனியே பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியின் மீது கணவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கொண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலு (59), நிஷா (31) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்து, 10 மற்றும் 7 வயதில் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனிதனியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கணவர் மனைவியை சந்தித்து பேச வந்துள்ளார். அப்போது, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகவும், இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால், அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு மனைவி வீட்டிற்கு வந்த வேலு, கையில் மறைத்து வைத்து ஆசிட்டை எடுத்து வந்ததாகவும், மனைவி எதற்கு இங்கு வந்தாய் என கேட்டதால் ஆத்திரமடைந்த வேலு, கையில் வைத்து இருந்த ஆசிட்டை மனைவியின் மீது வீசியுள்ளார்.
இதனால், உடல் முழுவதும் பல இடங்களில் காயம் ஏற்பட்ட மனைவி நிஷாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தனர் ஓடிவந்து வலியால் துடித்து கொண்டு இருந்த நிஷாவை மீட்டுள்ளனர். பின்னர், தகவலறிந்து விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல்துறையினர், அவரை வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, நிஷா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிர் கணவர் வேலுவை வேப்பங்குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
This website uses cookies.