தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கானபூர் சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த காரில் திடீரென தீ பிடித்து கொண்டது. சில நிமிடங்களிலேயே கார் முழுவதும் தீயில் எரிய தொடங்கியது.
இதில் காரை ஓட்டி வந்த இளைஞர் தீயில் படுகாயத்துடன் கதவை திறந்து வெளியே வந்து நடைபாதையில் படுத்துகொண்டு துடிதுடித்து அதே இடத்தில் இறந்தார். மேலும் காரில் அவருடன் வந்த பெண்ணும் தீயில் சிக்கி உயிருடன் கருகினர்.
இதையும் படியுங்க: Homework காட்டச் சென்ற 3-ம் வகுப்பு மாணவி.. அடுத்த நொடியில் நடந்த துயரம்!
அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். தகவல் அறிந்த மல்காஜிகிரி ஏசிபி சக்கரபாணி, கட்கேசர் சி.ஐ. பரசுராம் விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்தவர் குறித்து விசாரனை செய்தனர்.
இதில் நாரப்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீராம் (26) என்பதும் அவர் மொத்த சைக்கிள் கடை வியாபாரம் செய்து வருவதும் மெடிப்பள்ளியில் உள்ள டிராவல்ஸ் ஏஜென்சியில் செல்ப் டிரைவிங் கார் வாடகைக்கு எடுத்து கொண்டு செல்லும் போது கார் தீ விபத்து ஏற்பட்டு இறந்ததை கண்டறிந்தனர்.
ஆனால் காரில் ஸ்ரீராமுடன் இருந்தவர் மைனர் சிறுமி என்றும்,இது திட்டமிட்டே நடந்திருக்கக் கூடும் என்பதால் தற்கொலையா அல்லது சிறுமியை கொலை செய்து வாலிபரும் தற்கொலை செய்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.